நடிகை ரேஷ்மா, முதலில் பிரபல டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ 2 , மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் மக்களிடத்தில் இன்னும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், Denim உடையில் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…




Comments
Post a Comment